செய்திகள்
சுசீந்திரம் அருகே தொழிலாளியை குத்தி கொல்ல முயற்சி: பிரபல ரவுடி கைது
சுசீந்திரம் அருகே நடந்து சென்ற தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டி குத்தி கொல்ல முயன்ற பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் வழுக்கம்பாறை பல்பநாதன்புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 47). தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக வழுக்கம் பாறை சந்திப்பில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந் தார். அப்போது அங்கு வந்த பறக்கை செட்டித்தெருவைச் சேர்ந்த மணிகண்டபிரபு (31) அவரை தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார். செல்போனை தன்னிடம் தருமாறு வேலு கூறினார். ஆனால் மண்கண்டன் கொடுக்க மறுத்து அதை உடைத்தெறிந்தார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தான் வைத்திருந்த கத்தியால் வேலுவை குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் விலகிச் சென்றார். இதனால் காயம் எதுவும் இன்றி தப்பித்துக்கொண்டார்.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். மணிகண்டபிரபு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதுகுறித்து வேலு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக் டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டபிரபுவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டபிரபு பிரபல ரவுடி என்பதும், அவர் மீது போலீஸ் நிலைத்தில் அடி, தடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.