செய்திகள்

கே.வி.குப்பம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-07-11 16:50 GMT   |   Update On 2018-07-11 16:50 GMT
கே.வி.குப்பம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடியாத்தம்:

கே.வி.குப்பம் அருகே கீழ்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லூகாஸ். இவரது மகன் இந்திரகுமார் (வயது 19), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்திரகுமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட இந்திரகுமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூதாட்டியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News