செய்திகள்
கூடலூர், பந்தலூர், வால்பாறை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை நீடிப்பதால் இரண்டு தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. #NilgirisRain #HolidayForNilgirisSchool
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை நீடிப்பதால் இரண்டு தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. #NilgirisRain #HolidayForNilgirisSchool