செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
ஜெயங்கொண்டம் நகர இளைஞரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகர இளைஞரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவசங்கர், இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் கவிதைபித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுபாசந்திரசேகர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர திமுக இளைஞரணியினர் செய்திருந்தனர். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி கணேசன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் நகர இளைஞரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவசங்கர், இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் கவிதைபித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுபாசந்திரசேகர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர திமுக இளைஞரணியினர் செய்திருந்தனர். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி கணேசன் நன்றி கூறினார்.