செய்திகள்

ஆத்தூர் அருகே கல்லூரி பஸ் மோதி கோழிப்பண்ணை மேலாளர் பலி

Published On 2018-07-09 15:39 IST   |   Update On 2018-07-09 15:39:00 IST
ஆத்தூர் அருகே கல்லூரி பஸ் மோதி கோழிப்பண்ணை மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

தினமும் இவர் வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது மகன் விக்னேசை மோட்டார் சைக்கிளில் ஆரியம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

வழக்கம்போல் இன்றும் அவர் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றார். தோப்புமண்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்சும் மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகன் விக்னேஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த பொதுமக்கள் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News