என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Attur accident"
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி 16 -வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகவள்ளி (வயது 50). இவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வெளியே செல்வது வழக்கம். வழக்கம் போல் இன்று அதிகாலை 5.50 மணி அளவில் வீட்டின் அருகே சாலையில் சண்முகவள்ளி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் அவரது பின்னால் வந்து வேகமாக மோதியது. இதில் கீழே விழுந்ததில் சண்முகவள்ளிக்கு தலையில் பலத்த அடிப்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
தினமும் இவர் வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது மகன் விக்னேசை மோட்டார் சைக்கிளில் ஆரியம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
வழக்கம்போல் இன்றும் அவர் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றார். தோப்புமண்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்சும் மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகன் விக்னேஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த பொதுமக்கள் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்