search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே நடைப்பயிற்சி சென்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி பலி
    X

    ஆத்தூர் அருகே நடைப்பயிற்சி சென்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி பலி

    ஆத்தூர் அருகே நடைப்பயிற்சி சென்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி 16 -வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகவள்ளி (வயது 50). இவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வெளியே செல்வது வழக்கம். வழக்கம் போல் இன்று அதிகாலை 5.50 மணி அளவில் வீட்டின் அருகே சாலையில் சண்முகவள்ளி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் அவரது பின்னால் வந்து வேகமாக மோதியது. இதில் கீழே விழுந்ததில் சண்முகவள்ளிக்கு தலையில் பலத்த அடிப்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    Next Story
    ×