செய்திகள்

சென்னை வந்தடைந்தார் அமித் ஷா- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Published On 2018-07-09 07:25 GMT   |   Update On 2018-07-09 07:25 GMT
தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். #Amitsha
சென்னை :

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக பாஜக சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒருபகுதியாக, தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா தனி விமானத்தில் இன்று சென்னை வந்தடைந்தார். அவரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து வி.ஜி.பி. தங்க கடற்கரைக்கு செல்லும் அவர், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் மாலை 4 மணியளவில் பங்கேற்கும் அமித்ஷா, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை கட்சியின் சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News