செய்திகள்

வாணரப்பேட்டையில் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-07-07 11:18 GMT   |   Update On 2018-07-07 11:18 GMT
வாணரப்பேட்டையில் குடும்ப தகராறில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பு 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது47), பெயிண்டர். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ராமு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்ததால் ராமுவுக்கும், அவரது மனைவி பிருந்தாவுக்கும் தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று இரவும் இதுபோல ராமு மதுகுடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராமு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் ஆஸ்பெட்டால் கூரை இரும்பு பைப்பில் ராமு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News