செய்திகள்

மூலகுளத்தில் மதுகடையில் மோதல் - வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2018-07-06 12:23 GMT   |   Update On 2018-07-06 12:23 GMT
மூலகுளத்தில் மதுக் கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை முத்தரையர் பாளையம் பாப்பாத்தி நகரை சேர்ந்தவர் ஜோதி (வயது 39). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது எதிர் திசையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ் (22) உள்ளிட்ட 4 பேர் குடிபோதையில் ஜோதியிடம் தகராறு செய்தனர்.

இதனை தட்டிக்கேட்ட ஜோதியை அவர்கள் சரமாரியாக தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து ஜோதி ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.

Tags:    

Similar News