செய்திகள்

அறந்தாங்கியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

Published On 2018-07-06 17:05 IST   |   Update On 2018-07-06 17:05:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு தொழுவங்காட்டைச் சேர்ந்த பாண்டி (வயது 25) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

உடனே போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 20 லாட்டரி சீட்டுக்களையும், ரூ.700 ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News