செய்திகள்

அரச்சலூரில் தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் கடித்து கொன்றது

Published On 2018-07-02 19:39 IST   |   Update On 2018-07-02 22:53:00 IST
அரச்சலூரில் இன்று காலை தண்ணீர் தேடி வந்த மானை தெரு நாய்கள் கடித்து கொன்றது. தகவல் அறிந்த வன காப்பாளர் வந்து மானை பார்வையிட்டார்.

அரச்சலூர்:

அரச்சலூரில் 480 ஹெக்டர் பரப்பில் காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில் 500-க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், எறும்பு தின்னி, உடும்பு போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று காலை தண்ணீர் தேடி ஒரு புள்ளிமான் வழி தவறி காட்டை விட்டு வெளியே வந்தது. மானை கண்ட தெரு நாய்கள் அதை விரட்டி... விரட்டி கடித்து குதறியது. இதில் அந்த மான் இறந்து விட்டது.

இது குறித்து கிடைத்த தகவலின் படி அரச்சலூர் வன காப்பாளர் கோபால் வந்து மானை பார்வையிட்டார்.

பிறகு அந்த மான் பரிசோதனை செய்யப்பட்டு காப்பு காட்டிலேயே புதைக்கப்பட்டது.

வனத்துறை சார்பில் காப்பு காட்டுக்குள் வன விலங்குகளுக்கான தண்ணீர் நிரப்ப தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் தண்ணீர் நிரப்ப வில்லை. எனவே வனத்துறையினர் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News