செய்திகள்

சென்னை விமானத்தில் தங்க நகை கடத்திய பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்

Published On 2018-07-02 09:36 GMT   |   Update On 2018-07-02 09:36 GMT
சென்னை விமானத்தில் தங்க நகை கடத்திய பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி, பேகம், சிவகங்கையை சேர்ந்த சுரேஷ் அருண் ஆகியோரின் கைப்பைகளில் விலை உயர்ந்த செல்போன்கள், தங்க நகைகள், மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து மொத்தம் 87 செல்போன்கள், 400 கிராம் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனின் மதிப்பு ரூ 25 லட்சம் ஆகும். தங்க நகையின் மதிப்பு ரூ 12 லட்சம் ஆகும்.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி பிடிபட்ட 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

Tags:    

Similar News