ஒட்டன்சத்திரம் அருகே மாணவியை பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பூசாரிகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த முருகன் மகள் ராணி (16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
உடுமலைப்பேட்டை திருமூர்த்திநகர் முள்ளுப் பட்டியை சேர்ந்த கன்னியப்பன் மகன் மாயவன் என்ற கருப்பசாமி (18). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரும் ராணியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று கருப்புசாமி மாணவியை தனியாக அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு கருப்பசாமியின் நண்பர்களான முருகேசன் மகன் வினோத் (16), விக்னேஷ் (18) ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்படவே இது குறித்து பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அப்போது நடந்த விபரங்களை ராணி கூறினார். அதிர்ச்சி அடைந்த முருகன் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த கருப்பசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை தேடி வருகின்றனர்.