செய்திகள்

ஆர்.எஸ்.புரத்தில் என்ஜினீயர் தற்கொலை

Published On 2018-06-28 14:44 GMT   |   Update On 2018-06-28 14:44 GMT
ஆர்.எஸ்.புரத்தில் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை சீரநாயக்கன் பாளையம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி கிருஷ்ணன் (வயது22). என்ஜினீயர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலுடன் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரது அறையில் இருந்து அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எனக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி இருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News