செய்திகள்

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

Published On 2018-06-27 09:50 GMT   |   Update On 2018-06-27 09:50 GMT
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை மனுவில் தெரிய வந்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai

மதுரை:

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூர் மற்றும் குஜராத், பீகார், இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி தனியார் நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்தது.

அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில் மத்திய அரசு அனுமதித்த 13 எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகம், குஜராத், பீகார், இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமைய உள்ள மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இவற்றுக்கு கால நிர்ணயமும் நியமிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்குவங்காளம், மராட்டியம், அசாம், ஜார்கண்டில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு குறைந்த அளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIIMS #AIIMSinMadurai

Tags:    

Similar News