செய்திகள்

செல்போன் கவருக்குள் 3 கிலோ தங்கம் கடத்தல்- விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது

Published On 2018-06-27 04:02 GMT   |   Update On 2018-06-27 04:02 GMT
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செல்போன் கவரில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செல்போன் கவரில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மஸ்கட்டில் இருந்து விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது.

இந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த ரசீத் (வயது35) என்பவர் வெளியே வந்தார். அவருடன் விமான நிறுவன ஊழியர் விஜய் என்பவரும் வந்தார்.

3 கிலோ தங்கம் பறிமுதல்

இவர்களை சுங்க இலாகா அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் 2 பேரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரிடம் செல்போன்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது செல்போனிற்கு பதிலாக அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

2 செல்போன் கவர்களில் இருந்து 3 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.93 லட்சம் ஆகும்.

இதையடுத்து கேரளா வாலிபர் ரசீத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விமான நிறுவன ஊழியர் விஜய் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News