செய்திகள்

சென்னை எழும்பூரில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-27 03:13 GMT   |   Update On 2018-06-27 03:13 GMT
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் பேசுகையில், “எங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாக முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். #tamilnews
Tags:    

Similar News