செய்திகள்
மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகையின் மூன்றில் 2 பங்கு தொகையை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழக அரசுதான் முழுத் தொகையையும் வழங்குகிறது. அவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட உள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.900 வரை அதிகமாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.