செய்திகள்

குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து செந்துறையில் பெண்ணுக்கு அடி-உதை

Published On 2018-06-23 22:33 IST   |   Update On 2018-06-23 22:33:00 IST
செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு பகுதியில் பெண் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி வந்தார். இதை பார்த்த பொதுமக்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து அப் பெண்ணை தாக்கினர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது கோட்டைகாடு. இந்த பகுதி யில் இன்று காலையில் சுமார் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி வந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் அவர்களிடம் பேச வில்லை. அந்த பெண்ணின் மணிபர்சை பார்த்த போது அதில் 7 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதனால் அந்த பெண் குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் அவரை சராமாரியாக தாக்கினர். 

பின்னர் அங்குள்ள கோவிலில் அவரை அமர வைத்து தளவாய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அந்த பெண் இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசினார். தமிழ் தெரியவில்லை. 

மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 20 ரூபாய் நோட்டு ஒரு கட்டு இருந்தது. மொத்தம் ரூ. 2 ஆயிரம் இருந்தது . அவரை பார்க்க வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. 
Tags:    

Similar News