செய்திகள்

திண்டலில் தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்: போலீசார் விசாரணை

Published On 2018-06-22 19:12 IST   |   Update On 2018-06-22 19:12:00 IST
திண்டலில் வீட்டில் இருந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டல்:

ஈரோடு மேல் திண்டல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பெயர் வள்ளி (வயது 25). கிருஷ்ணன் தனியார் பள்ளி ஒன்றில் சமையல் காரராக பணிபுரிந்து வருகிறார். 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வள்ளி வீட்டில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் வீட்டு முன் அப்பகுதி மக்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இத்துக்கு சென்றனர். பிணமாக தொங்கிய வள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் வள்ளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதா தேவியும் விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News