செய்திகள்

மதுரைக்கு எய்ம்ஸ் வந்தது வெற்றி வரலாறு: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2018-06-21 16:27 GMT   |   Update On 2018-06-21 16:27 GMT
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்தது ஒரு வெற்றி வரலாறு என்று ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. கூறினார்.

திருப்பரங்குன்றம்:

காவிரி நதிநீர் பிரச் சினையில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதையொட்டி திருப்பரங்குன்றத்தில் நடந்த காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

காவிரி பிரச்சனை என்பது பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பிரச்சினை ஆகும். 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் அப்போதிருந்த கருணாநிதி தன் மீது உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கமறுத்து விட்டதோடு காவிரி வழக்கில் தமிழக அரசின் சார்பில் போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார்.

காவிரி பிரச்சனையில் புரட்சித்தலைவர் முதன் முதலாக உச்சநீதிமன்றம் சென்றார். அதனை யொட்டி புரட்சித்தலைவி அம்மா பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

அதில் சென்னை கடற்கரையில் 80 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்து காவிரிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார்.

மேலும் 2013ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பைமத்திய அரசிதழில் அம்மா வெளியிடச் செய்து தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்க உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அம்மாவின் மறைவிற்குப் பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசுஅமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றது மட்டுமல்லாது காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிதழில் வெளியிடச்செய்துகாவிரி நீர் பிரச்சினையில் ஒரு நிரந்தரதீர்வை பெற்று மாபெரும் வரலாற்றை அம்மாவின் அரசு படைத்துள்ளது

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று அம்மா கடுமையாக போராடினார் தொடர்ந்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அம்மாவின் இந்த கனவை நனவாக்கும் வண்ணம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மத்திய அரசிடம் கடுமையாக போராடி எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வந்து மாபெரும் ஒரு வெற்றி வரலாற்றை படைத்துள்ளனர்.

இந்த எய்ம்ஸ் மருத்துவ மனை மூலம் தென் மாவட்டத்திலுள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவது மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்து மக்களும் பயன் பெறுவார்கள்.

எய்ம்ஸ் மருத்துவ மனைரூ.1500 கோடியில் உருவாகிறது. இதில் மிகச் சிறப்பு என்றால் இந்த மருத்துவமனை மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த தோப்பூரில் அமைய உள்ளது.

மதுரை புறநகர் பகுதிக்கு இதை உருவாக்கிகொடுத்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News