திருச்சி:
திருச்சி வாழவந்தான் கோட்டை பெரியார்நகரை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் தனலட்சுமி (வயது 26).
இவருக்கும் பாலசந்திரன் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
பின்னர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 16-ந் தேதி தனது தோழியுடன் தனலட்சுமி திருப்பூரில் இருந்து பஸ் மூலம் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இது குறித்து சிவகாமி கண்டொன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தனலட்சுமியை தேடி வருகிறார்கள். தனலட்சுமியை யாரும் கடத்தி சென்றார்களா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.