செய்திகள்

சங்கராபுரம் அருகே குடிபோதையில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

Published On 2018-06-19 17:41 IST   |   Update On 2018-06-19 17:44:00 IST
சங்கராபுரம் அருகே குடிபோதையில் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிஷிவந்தியம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (38). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

சம்பவத்தன்று 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து மது குடித்தனர். அப்போது குடிபோதையில் ஆறுமுகம், சங்கரின் மனைவி பற்றி அவதூறாக பேசினார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அருகில் கிடந்த கல்லை எடுத்து சங்கரின் தலையில் தாக்கினார். காயம் அடைந்த சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News