செய்திகள்
ராஜபாளையம் அருகே இளம்பெண்ணை தாக்கி நகை பறிப்பு
ராஜபாளையம் அருகே இளம்பெண்ணை தாக்கி நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சோலைச்சேரி கிராமத்தில் உள்ள முனியம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் ஆவுடையம்மாள் (வயது25).
இவர்களுக்கு சொந்தமான வயல் மண்ணடி கண்மாய் பகுதியில் உள்ளது. நேற்று வயல் வேலைக்கு சென்ற ஆவுடையம்மாள் பிற்பகலில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று ஆவுடையம்மாள் கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்தான்.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர் நகையை பிடித்துக்கொண்டு போராடினார். இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் ஆவுடையம்மாளை சரமாரியாக தாக்கி விட்டு கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினான்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.