செய்திகள்

பெருந்துறை அருகே தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

Published On 2018-06-18 11:18 GMT   |   Update On 2018-06-18 11:18 GMT
பெருந்துறையில் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்த ஊழியர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை:

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பெருந்துறை அருகே உள்ள குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அங்கு அவர் குடும்பத்துடன் தங்க வீடும் ஒதுக்கப்பட்டிருந்தது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு சுரேஷ் தங்கி வேலை பார்த்து வந்தார். சுரேசுக்கு குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி குடும்பத் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் சுரேஷ் நேற்று தனது வீட்டு முன் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News