செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்

Published On 2018-06-18 08:34 GMT   |   Update On 2018-06-18 08:34 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி தபால்மேடு பகுதியில் சுடுகாடு உள்ளது. இதன் அருகே தகரத்தால் ஆன கொட்டகையில் சுமார் 55 வயது மதிக்கதக்க ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

பிணமாக கிடந்தவர் அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அவரை பற்றிய தகவல் தெரிந்தால் ஸ்ரீபெரும்புதூர் 9498151501, 9498100274 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News