செய்திகள்

பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் பி.எஸ்.என்.எல். என்ஜினீயர் தற்கொலை

Published On 2018-06-16 12:06 GMT   |   Update On 2018-06-16 12:06 GMT
கடன் வாங்கி பங்குசந்தையில் முதலீடு செய்து ஏராளமான பணத்தை இழந்ததால் பிஎஸ்என்எல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் விமலன்(வயது 35). என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராம்நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது விமலன் அறைக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

இதைகண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விமலனுக்கு இன்னும் திருமணமாக வில்லை. இவர் கடன் வாங்கி பங்குசந்தையில் முதலீடு செய்து ஏராளமான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறத. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றன். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News