செய்திகள்

நிதி நிறுவன அதிபர்கள் கடத்தல்: கைதான கொள்ளையர்களிடமிருந்து ரூ.28 லட்சம்-25 பவுன் நகை பறிமுதல்

Published On 2018-06-14 10:35 GMT   |   Update On 2018-06-14 10:35 GMT
வடபழனியை சேர்ந்த நிதி நிறுவன அதிர்பர்களை கடத்திய வழக்கில் கைதான கொள்ளையர்களிடமிருந்து ரூ.28 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் நகைகள் பறிமுதல செய்யப்பட்டது.
சென்னை:

வடபழனியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர்களான மோகன், மாணிக்கம் ஆகியோர் கடந்த மாதம் 23-ந்தேதி காரில் கடத்தப்பட்டனர்.

2 பேரையும் கத்திமுனையில் மிரட்டி பங்களாவில் அடைத்து வைத்த கும்பல் ரூ.33 லட்சம் பணம் மற்றும் 28 பவுன் நகைகளை பறித்தது.

இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடபழனி உதவி கமி‌ஷனர் சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பசுபதி, மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கடத்தல் வழக்கின் குற்றவாளிகளான செல்லப்பாண்டி, சுதீர்குமார், நந்த குமார், சேக்தாவூத், சீனிவாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன், வினோத் ஆகியோர் சைதாப்பேட்டை கோர்ட்டிலும், சரவணகுமார் அம்பத்தூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

இவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது 3 பேரிடமிருந்தும் ரூ.28 லட்சம் பணம், 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. #Tamilnews
Tags:    

Similar News