செய்திகள்
பொள்ளாச்சி அருகே நிதிநிறுவன அதிபர் கடத்தி கொலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நிதிநிறுவன அதிபரை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி(47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கார் புரோக்கராகவும், கார் வாங்க நிதி உதவியும் செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் புதருக்குள் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொதுமக்கள் இன்று ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிணமாக கிடந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கந்தசாமி என்பது தெரியவந்தது. அவரது தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. அவரை மர்மநபர்கள் கடத்தி கொலை செய்துவிட்டு பிணத்தை புதருக்குள் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி(47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கார் புரோக்கராகவும், கார் வாங்க நிதி உதவியும் செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் புதருக்குள் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொதுமக்கள் இன்று ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிணமாக கிடந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கந்தசாமி என்பது தெரியவந்தது. அவரது தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. அவரை மர்மநபர்கள் கடத்தி கொலை செய்துவிட்டு பிணத்தை புதருக்குள் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews