செய்திகள்

மேலூர் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு

Published On 2018-06-07 12:23 GMT   |   Update On 2018-06-07 12:23 GMT
மேலூர் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 7½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

மதுரை:

மேலூர் அருகே உள்ள புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவி பிரேமா (வயது40). நேற்று கணவன் -மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

மேலூர் சாலையில் ஒரு பள்ளி அருகே சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் பிரேமா கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு சென்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மலைச்சாமி மோட்டார் சைக்கிளில் அவர்களை விரட்டினார். ஆனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மலைச்சாமி, பிரேமா படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News