செய்திகள்

ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள் - நாஞ்சில் சம்பத்

Published On 2018-06-05 14:39 GMT   |   Update On 2018-06-05 14:39 GMT
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிமன்றத்தில் பல முறை நாடிய வைகோவுக்கு, நாஞ்சில் சம்பத் ஸ்டெர்லைட் நாயகன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடக்க காலம் முதலே போராடி வருபவர் வைகோ. பல முறை நீதிமன்றத்தை நாடி ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக வாதிட்டுள்ளார். கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர் வைகோ என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைக்கு பின்னர் சசிகலாவை எதிர்த்து பின்னர் சசிகலா அணிக்கு ஆதரவாளராகி பின்னர் தினகரனுடன் இணைந்து செயல்பட்டு பின்னர் அவருடன் முரண்பட்டு அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைகோவை நிகழ்ச்சி ஒன்றில் நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசியிருந்தார். அவர் மீண்டும் மதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News