செய்திகள்

நீலகிரி வனப்பகுதியை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் - நடிகர் விவேக் பேட்டி

Published On 2018-06-05 09:18 GMT   |   Update On 2018-06-05 11:09 GMT
60 சதவீதம் வனப்பகுதி கொண்ட நீலகிரி மாவட்டத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
ஊட்டி:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று ஊட்டி ஸ்டீபன் தேவாலயத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா மற்றும் சிறப்பு விருந்தினர் நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு உறுதி மொழி ஏற்றனர்.

பின்னர் விவேக் கூறும் போது, நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். இதனை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது அவசியம். பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாவட்டமாக்க வேண்டும். நீர்நிலைகளை தூய்மை படுத்தி பாதுகாக்க வேண்டும். ஒரு லட்சம் மரக்கன்று நட உறுதி மொழி எடுக்கப்பட்டது என்று கூறினார்.

பின்னர் தூய்மை ரத வாகனத்தை தொடங்கி வைத்து காந்தல் பகுதியில் குப்பைகளை அகற்றினார்.
Tags:    

Similar News