செய்திகள்

திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-06-04 16:00 GMT   |   Update On 2018-06-04 16:00 GMT
திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அருகே உள்ள மேலவாக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள போர்வெல் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது போர்வெல் பழுது ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், சுமார் 2 மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பக்கத்து ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

குடிநீர் பற்றாக்குறை குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலவாக்கரை மெயின் ரோட்டில் இன்று காலை காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் திருக்குவளை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News