செய்திகள்

வேலை இல்லாததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-06-04 17:36 IST   |   Update On 2018-06-04 17:36:00 IST
வேலை இல்லாததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:

மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), கூலித்தொழிலாளி. ராஜா தினமும் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா (29) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

தற்போது வேலை இல்லாததால் வருமானமும் இல்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சரண்யா கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News