செய்திகள்

வேளச்சேரியில் டாக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-06-04 05:50 GMT   |   Update On 2018-06-04 05:50 GMT
வேளச்சேரியில் டாக்டர் வெளிநாடு செல்வதை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பள்ளிக்கரணை:

சென்னை வேளச்சேரி விஜயநகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து வீடுகள் உள்ள இடத்தில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

டாக்டர் வெளிநாடு செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து வேளச்சேரி போலீசில் டாக்டர் அழகர் சாமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News