செய்திகள்

போடியில் மனைவி பிரிந்த துக்கத்தில் கணவன் தற்கொலை

Published On 2018-06-03 19:09 IST   |   Update On 2018-06-03 19:09:00 IST
போடியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

மேலசொக்கநாதபுரம்:

போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது30). இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அக்கம் பக்கத்தினர் சமரசம் பேசியபோதும் குடும்பத்தில் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கலைச்செல்வி கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனவேதனையடைந்த அண்ணாமலை தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News