செய்திகள்

காரை தாறுமாறாக இயக்கியதால் தகராறு: வாலிபரின் கைவிரலை கடித்து துப்பிய டிரைவர் கைது

Published On 2018-06-02 17:00 IST   |   Update On 2018-06-02 17:00:00 IST
ஈரோட்டில் காரை தாறுமாறாக ஓட்டிய தகராறில் வாலிபரின் கைவிரலை கடித்து துப்பிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு:

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் ராஜேஸ் (வயது 31). இவர் ஷேர் மார்க்கெட் தொழில் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கொல்லம்பாளையம் கரூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.

அந்த கார் தாறுமாறாக இயக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே அந்த காரை ராஜேஸ் தடுத்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த ஈரோடு சாஸ்திரி நகர், விவேகானந்தர் வீதியை சேர்ந்த நரசிம்மனின் மகன் சிலம்பரசனை, ராஜேஸ் கண்டித்தார்.

அவருடன் சேர்ந்து அந்த பகுதி மக்களும் சிலம்பரசனை எச்சரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சிலம்பரசனுக்கும் ராஜேசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ராஜேசின் இடது கை கட்டை விரலை சிலம்பரசன் கடித்து துப்பினார். இதில அந்த விரல் துண்டானது. சிகிச்சைக்காக ராஜேஸ் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கைதான சிலம்பரசன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News