செய்திகள்

மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்

Published On 2018-06-02 03:27 GMT   |   Update On 2018-06-02 03:27 GMT
சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இரவு 9.45 மணி ரெயில் இன்றும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 5.55 மணி, கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 5.20, 5.50 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இரவு 11.20 மணி ரெயில் இன்றும், அதிகாலை 4.20 மணி ரெயில் நாளையும் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் அதிகாலை 4 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News