செய்திகள்

அதிமுக பிரமுகர் கொலை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

Published On 2018-06-01 11:55 GMT   |   Update On 2018-06-01 11:55 GMT
தேவனாம்பட்டினத்தில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கடந்த 15-ந்தேதி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் சோனாங்குப்பத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேவனாம் பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் சதீஷ் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் ஆறுமுகம், சதீஷ் மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News