செய்திகள்

அரச்சலூர் அருகே மளிகை கடையில் புகுந்து திருட்டு

Published On 2018-06-01 10:50 GMT   |   Update On 2018-06-01 10:50 GMT
அரச்சலூர் அருகே மளிகை கடையில் புகுந்து திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரச்சலூர்:

அரச்சலூர் அருகே உள்ளது ராட்டை சுற்றி பாளையம். இங்கு ஜெயச்சந்திரன் (42) என்பவர் 25 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் மர்ம ஆசாமிகள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு கல்லா பெட்டி மற்றும் பல்வேறு இடங்களில் துழாவி பார்த்தனர். ஆனால் எங்கும் பணம் இல்லை. வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் வசூலான பணத்தை ஜெயச்சந்திரன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். அதே போல் எடுத்து சென்றதால் பணம் தப்பியது.

பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மர்ம ஆசாமிகள் 25 கிலோ (ஜிப்பம்) கொண்ட 12 அரிசி மூட்டைகளை தூக்கி கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News