செய்திகள்

முசிறியில் நாளை மின்தடை

Published On 2018-06-01 10:03 GMT   |   Update On 2018-06-01 10:03 GMT
முசிறியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

முசிறி:

முசிறி துணைமின் நிலையத்தில் மின்நிறுத்தம் சம்பந்தமாக செயற் பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முசிறி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விருப்பதால் முசிறி, சிங்கார சோலை, பார்வதிபுரம், பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுசிங்யூனிட், தண்டலைப் புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பலாம் பட்டி, வடுகப் பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாச நல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப் பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 2-6-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News