செய்திகள்

பஸ் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது

Published On 2018-05-30 13:07 GMT   |   Update On 2018-05-30 13:07 GMT
காரிமங்கலம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கம்பைநல்லூர் அருகே பெரிச்சாகவுண்டம் பட்டியில் அரசு டவுன் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இது குறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் பெரிச்சாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி (37), சக்தி (38) என்ற 2 வாலிபர்களை கைது செய்தார். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News