செய்திகள்

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-05-30 06:45 GMT   |   Update On 2018-05-30 06:45 GMT
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. #MaduraiAdheenam #Nithyananda
மதுரை:

மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்கி மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், ஆதீனத்தையும், சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் நித்யானந்தா செயல்படுகிறார். அவர் மதுரை ஆதீனத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை. #MaduraiAdheenam #Nithyananda
Tags:    

Similar News