செய்திகள்

அரசு மணல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Published On 2018-05-29 12:07 GMT   |   Update On 2018-05-29 12:07 GMT
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது திருமானூர், திருமழபாடி, அரண்மனைகுறிச்சி, ஆண்டிமங்கலம், ஏலாக்குறிச்சி உள்பட 32 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட மணல் குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் முத்துக்குமார் தலைமையில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

மேலும், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

அந்த மனுக்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முகாமில், மாற்றுத்திறனாளிகளை காத்திருக்க வைக்காமல் அவர்களிடம் கலெக்டரே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாற்றுத்திறனாளிகளிடம் நல அதிகாரிக்கு உத்தரவிட்டார்.  
Tags:    

Similar News