செய்திகள்

போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம் - ரஜினிகாந்த்

Published On 2018-05-28 14:34 GMT   |   Update On 2018-05-28 14:34 GMT
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். #Sterlite #Rajini
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.

அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார். இதற்கு அரசியல்வாதிகளும், முக்கிய பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, ‘போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’ என்றார்.
Tags:    

Similar News