செய்திகள்

போடியில் சமோசா வியாபாரி மர்ம மரணம்

Published On 2018-05-28 10:58 GMT   |   Update On 2018-05-28 16:57 GMT
போடியில் சமோசா வியாபாரி மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி பெருமாள் கோவில் அருகே அரசமர தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் தள்ளுவண்டியில் வடை, சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவரது குடும்பத்தினர் திருப்பூரில் உள்ளனர். தனியாக வசித்து வந்த அவர் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அங்கிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் போடி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். அந்த உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

எனினும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்துடவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News