செய்திகள்
நிர்மலா தேவி விவகாரம்: முருகன்-கருப்பசாமி காவல் நீட்டிப்பு
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன் மற்றும் கருப்பசாமி காவல் ஜூன் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:
மாணவிகளை பாலியல் விவகாரத்தில் அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் முருகன், கருப்பசாமி ஆகியோரது காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 11-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
மாணவிகளை பாலியல் விவகாரத்தில் அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் முருகன், கருப்பசாமி ஆகியோரது காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 11-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். #NirmalaDevi #Murugan #Karuppasamy