செய்திகள்
சிவகங்கை, காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேர் கைது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் இறந்துபோனார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கையில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கணேசன்(வயது 40), மாரிமுத்து(45), அழகர்சாமி(48), ராஜேந்திரன்(45), சுரேஷ்கண்ணன்(46), பால முருகன்(40), தங்கவேல்(50) ஆகிய 7 பேரை சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் கைது செய்துள்ளார்.
இதேபோன்று காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கல்யாணகுமார், முத்துமாணிக்கம் ஆகிய 2 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு போலீசார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் இறந்துபோனார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கையில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கணேசன்(வயது 40), மாரிமுத்து(45), அழகர்சாமி(48), ராஜேந்திரன்(45), சுரேஷ்கண்ணன்(46), பால முருகன்(40), தங்கவேல்(50) ஆகிய 7 பேரை சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் கைது செய்துள்ளார்.
இதேபோன்று காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கல்யாணகுமார், முத்துமாணிக்கம் ஆகிய 2 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு போலீசார் கைதுசெய்தனர்.