செய்திகள்

முசிறி அருகே முதியவர் தற்கொலை

Published On 2018-05-24 16:52 GMT   |   Update On 2018-05-24 16:52 GMT
முசிறி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசிறி:

முசிறி அடுத்த கீழவடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயசேகரன் (58). இவர் முசிறியில் உள்ள நகை அடகு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த விஜயசேகரன் நேற்று தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவம் குறித்து விஜயசேகரன் மகன் தீபன்ராஜ் முசிறி போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிந்து தற்கொலை செய்து கொண்ட விஜயசேகரன் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். 

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News